85.திருப்புகழ்- 79.வாலிகண்டபுரம்
deivadharisanam.com. thanks
அருணகிரிநாதர் அடுத்து வந்த 78வது தலம் வாலி கண்ட (அ) கொண்ட புரம். இது பெரம்பலூருக்கு அருகில் உள்ளது. பழமையான கோவில். ஸ்வாமி பெயர் வாலீஶ்வரர். ராமாயணகால தொடர்புடையது . வாலி இங்கு தவம் செய்து சிவபெருமானிடம் வரம்பெற்று மிகுந்த பலசாலியானான்.. இங்குள்ள பால தண்டாயுத பாணியை அருணகிரியார் பாடியிருக்கிறார்.
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத வும்பல்போலே
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத வும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச னங்கள்பேசிச்
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லூத தண்டிகையி லந்தமாகச்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லூத தண்டிகையி லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனென அன்புதாராய்
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனென அன்புதாராய்
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு பங்கினோடச்
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு பங்கினோடச்
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத லன்புகூர
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத லன்புகூர
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட னங்கொள்வோனே
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுரமே யமர்ந்து வளர் தம்பிரானே.
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுரமே யமர்ந்து வளர் தம்பிரானே.
உனது பாத தொண்டனென அன்புதாராய்.
ஈ, எறும்பு, நரி, நாய்க்கூட்டங்கள், பேய், கழுகு, காகம் ஆகியவை உண்ணும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என்று நினைத்து, ஆணவ மொழிகளையே பேசி, மத யானைபோல -
எல்லாம் என்னுடைய ஆட்சிக்கு அடங்கியது என்னும்படி, இன்பமடைந்து, அதுவே நிலையாக இருக்குமென நம்பி, 'இவருக்கு இந்த ஆடம்பரங்கள் போதுமா ' எனச் சிலர் சொல்லும்படி, செல்வம் மிகுந்து,அழகிய எண்ணங்கள் கொண்டு பேசி,
குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்து, நல்ல மணம் வீச, மங்கையர்கள் நடனம் ஆட, வெண் சாமரங்கள் மேலெழுந்து வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலிய வாத்யங்கள் இசைத்து வர, பல்லக்கில் -
அழகாக அமர்ந்துவரும் பெருமைகூடிய பெரிய வாழ்வைக் கொண்டு திரியும் ஆசையானது வெந்து அழிய, உன்மீது அன்பு மிகுந்து, மங்களமான உனது தரிசனத்தைப் பெற்று, உனது திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பைத் தருவாயாக !
வஞ்சனைச் செயல்களுக்கு இடமாக இருந்த , இருண்ட பிளவுகளைக்கொண்ட கிரௌஞ்ச மலையும், அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்துபட, சூர்யனுடைய குதிரைகள் பூட்டிய தேர் முன்பு போனது போலவே நேர்வழியில் நடுவாக ஓட,
பொன் நிறத்தவனான அந்த பிரம்மாவும், இந்த்ரனும், முதல் தேவர் முதல் கடைத் தேவர் வரை எல்லோரும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, கனக சபையில் நடமாடும் எந்தை சிவபிரான் முதலாக யாவரும் அன்பு மிகுந்து நிற்க,
போருக்கு என்று வாதுசெய்துவந்த அசுரர்கள் மாண்டு அழிய, செவ்விய திருக்கையில் தாங்கிய வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள் பொன்னுலகில் குடியேற, வித்யாதர மாதர்கள் மிகவும் மனம் மகிழ, நின்று நடனம் புரிபவனே !
நறுமணமுள்ளதும்,குடம்போன்றதுமான கொங்கையை உடைய மான் போன்ற வள்ளியிடம் வந்து தினைப்புனத்தைக் காவல் செய்த முருகா!
பெரிதும் மதிக்கத்தக்க வாலிகொண்ட புரத்தில் பொருந்தி வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே !
உனது பாத தொண்டன் எனவாகும் அன்பு தாராய்.
எளிய பாடல்.
உடல் தர்மம் செய்ய அவசியமானது. சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் என்பார்கள். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். ஆனால் இந்த உடலும் அதைப்பற்றிய சுகங்களுமே நிரந்தரம் என நம்பி மோசம் போகக்கூடாது என்பது பெரியோர்கள் அறிவுரை.
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
என்பது அப்பர் திருவாக்கு, இதையே அருணகிரிநாதர் முதல் வரியில் சொல்கிறார்.
பலகாலம் தேவர்களைச் சிறையிட்ட சூரபத்மனுக்குப் பயந்து சூர்யன் கூட நேர்வழியில் செல்லவில்லை. முருகன் வந்து சூராதி அசுரர்களை வதைத்த பிறகுதான் மீண்டும் சூர்யன் தன் பழைய நிலைக்கு வந்து நேராகச் செல்லத் தொடங்கினான். இதை ஐந்தாவது அடியில் அழகாகச் சொல்கிறார்.
"எணும் பெரிய வாலிகொண்டபுரம் " என்கிறார். மிகவும் மதிக்கத்தக்க - பெரிதாக எண்ணத்தக்க வாலிகொண்டபுரம் என்பது. இன்று பலரும் அறியாத இடமாக இருக்கிறது, இத்தகைய சிற்றூர்களில் உள்ள பழைய கோவில்களில்தான் தெய்வ சான்னித்யம் மிகுந்து இருக்கும் போலும்!
இந்தப்பாடலும் முந்தைய திருமாந்துறைப் பாடல் கருத்தையே கொண்டிருக்கிறது!
வாலிகொண்டபுரத்தில் உள்ள படிவைத்த குளம்-கிணறு. [Step Well] இத்தகைய அமைப்பை குஜராத்தில் காணலாம்.
படம்: facebook.com/nammaperambalur. Thanks.
No comments:
Post a Comment