61.திருப்புகழ் 55.மருத்துவக்குடி
மருத்துவக்குடி என்று இன்று வழங்கப்படும் இடம் முன்பு இடைக்குளம் என்ற பெயர் பெற்றிருந்தது, இது அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 55வது தலம்.
ஸ்வாமி ஐராவதேஶ்வரர், அம்பாள் அபிராமி. துர்வாசரோடு சம்பந்தப்பட்ட புராண வரலாறு இருக்கிறது. அப்பரின் ஒரு பாடலில் (6.71.10 ) இது வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது.
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா......
என்று வருகிறது. இது ஆடுதுறைக்கு அருகில் இருக்கிறது.
இங்கு அருணகிரிநாதர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
தவ ஞானம் பெற
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
சினத்தர் பட்டிட வேவே லேவிய முருகோனே
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலா யோதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில்வீரா
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
மனத்தி யற்படு ஞானா தேசிக வடிவேலா
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
பாழ்படு வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை
யவத்த மெத்திய ஆசா பாசனை
யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை யருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
யளிக்கு நற்பொரு ளாயே மாதவ
வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை யருள்வாயே
எளிய பாடல்.
பெரியோர்கள் சொன்ன நல்ல புத்தியைக் கேட்காதவனும், பயனில்லாத ஆசைகளிலேயே பற்றுடையவனும் உள்ளத்தில் உண்மையை அறியாதமூடனாகிய நான், வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி நல்லவனாக, சிறந்த தவ ஞானம் [ மேலா மூதுரை யளிக்கும் நற்பொருளாயே மாதவ வுணர்ச்சி ] பெறும்படி உனது திருவடியைத் தந்து அருளவேணும் என்கிறார்.
வேதத்தில் சொல்லியபடி நல்லவனாக வேண்டும் என்னும் கருத்து இவர் வைதீக மரபில் வந்தவர் என்பதைக் காட்டலாம் !
இரண்டு பாங்களும் :www.shivatemples.com. நன்றி.
No comments:
Post a Comment